தேர்ந்தெடுக்க குழு
கபில்தேவ் தலைமையில் அந்த குழு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. கபில் தேவ், கெயிக்வாட் மற்றும் சாந்தாரங்கசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க உள்ளது. வரும் ஆகஸ்ட் 13 மற்றும் 14ம் தேதி நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
கோலியின் விருப்பம்
இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நீடிக்க வேண்டும் என்று கேப்டன் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்வுக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான கெய்க்வாட் எதிர் கருத்தை கூறினார். கோலியின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை, இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
ஆலோசிக்க வேண்டும்
இது குறித்து முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியும் கருத்து தெரிவித்திருந்தார். அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் அனைத்து உரிமைகளும் கேப்டன் என்ற அடிப்படையில் கோலிக்கு உள்ளது. அவர் தனது கருத்துக்களையும், ஆலோசனைகளை நிச்சயம் கொடுக்க வேண்டும். தேர்வுக்குழு நிர்வாகிகளும் கோலியின் கருத்தை ஆலோசிக்க வேண்டும் என்றார்.
கோலிக்கு ஆதரவு
இந்நிலையில் இந்த விவகாரத்தில் கோலியை ஆதரித்துள்ளார் கபில்தேவ். அவர் கூறியதாவது: பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் கோலி உட்பட அணியில் உள்ள ஒவ்வொருவரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். பயிற்சியாளர் குறித்து கருத்து சொல்ல கோலிக்கு உரிமை உள்ளது.
பரிந்துரைக்கப்படும்
பயிற்சியாளரை நாங்கள் மூவரும் கூட்டாக விவாதித்து முடிவு செய்வோம். பின்னர், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எங்களின் பரிந்துரையை அளிப்போம். அதன் பிறகு முறையான அறிவிப்பு வெளியாகும் என்றார்.