சுவாரஸ்ய நிகழ்வு
அப்படி ஒரு ரசிகர் செய்த விஷயம் தான் தற்போது இணையத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. கவுகாத்தியை சேர்ந்தவர் ராகுல் ராய் என்பவர். விராட் கோலியின் தீவிர ரசிகரான இவர், பல ஆண்டுகளாக அவரை காண வேண்டும் என்பதற்காக காத்துக்கொண்டிருந்துள்ளார். அதற்கு சாதகமாக தான் இந்தியா - தென்னாப்பிரிக்க டி20 தொடர் அமைந்துள்ளது.
2வது டி20
இரு அணிகளும் மோதிய 2வது டி20 போட்டி சமீபத்தில் கவுகாத்தியில் தான் நடைபெற்றது. இதற்காக இந்திய வீரர்கள் அசாமில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்துள்ளனர். மைதானங்களில் கோலியை பார்க்க முடியாமல் தவித்த ராகுல் ராய், இதுதான் சரியான வாய்ப்பு என கருதியுள்ளார். எனவே இந்திய வீரர்கள் தங்கிய அதே ஹோட்டலில் ஒரு இரவுக்கு ரூம் எடுத்துள்ளார்.
எவ்வளவு வாடகை?
வழக்கமாகவே அதிக வாடகை கொண்ட அந்த ஹோட்டலில், இந்திய வீரர்களும் இருந்ததால் கூடுதல் விலையாகவே இருந்துள்ளது. அதாவது ஒரு இரவுக்காக சுமார் ரூ.23,000 செலவு செய்து ரூம் புக் செய்துள்ளார். அதன் பலனாக, கோலியையும் சந்தித்துள்ளார். காலை உணவுக்காக கோலி வந்த போது, அவரை அங்கேயே பார்த்து பேசியுள்ளார்.
உடனடியாக செல்ஃபி
ரசிகர் தனக்காக செய்த அனைத்து விஷயங்களையும் கேட்ட விராட் கோலி, அவருடன் சிறிது நேரம் பேசிவிட்டு, செல்ஃபியும் எடுத்துக்கொள் எனக்கூறியுள்ளார். மேலும் அந்த ரசிகர் கொண்டு சென்ற புகைப்படத்திலும் ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.