ஐபிஎல் 49வது லீக் போட்டி
நேற்றைய ஐபிஎல்லின் 49வது போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. பிளே-ஆப் சுற்றுக்கு இன்னும் ஒருசில போட்டிகளே உள்ளன. இந்த போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் கேகேஆர் அணி இருந்த நிலையில், சிஎஸ்கேவிடம் தோல்வியுற்றுள்ளது.
72 ரன்கள் குவிப்பு
முதலில் ஆடிய கேகேஆர் அணி 173 ரன்களை இலக்காக அளித்த நிலையில் தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கேவின் இளம் வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா போன்றவர்கள் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற செய்துள்ளனர். முக்கியமாக ருதுராஜ் கெய்க்வாட் 53 பந்துகளில் அடித்த 72 ரன்கள் அணி சிறப்பாக வெற்றி பெற உதவியது.
அடுத்த தொடருக்கு உதவும்
வெற்றியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தோனி, பிளே ஆப் சுற்றுக்கு செல்லவில்லை என்றாலும் இதுவரை விளையாடாத இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருவதாகவும், இது அடுத்த தொடருக்கு சிறப்பாக உதவும் என்றும் தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்த நிலையில், தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை ருதுராஜ் சிறப்பாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
தோனி பாராட்டு
போட்டியை சிறப்பாக முடித்துக் கொடுத்த ஜடேஜா இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருவதாகவும் தோனி பாராட்டு தெரிவித்தார். முக்கியமாக இறுதி ஓவர்களில் அவர் ரன்களை எடுப்பதை தோனி சுட்டிக் காட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய தோனி, பிளே-ஆப்பிற்கு தகுதி பெறவில்லை என்றாலும் இந்த தொடரில் தங்களது சிறப்பை வெளிப்படுத்துவது முக்கியம் என்றும் கூறியுள்ளார்.