92வது போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 92வது போட்டி கோவாவின் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதில் எப்சி கோவா மற்றும் சென்னையின் எப்சி அணிகள் மோதின. இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக போராடிய நிலையில் 2க்கு 2 என்ற கோல் கணக்கில் போட்டி டிரா ஆனது.
2க்கு 2 கோல் கணக்கில் டிரா
இந்த போட்டியில் சென்னையின் அணி சிறப்பான துவக்கத்தை தந்த போதிலும் தொடர்ந்து சிறப்பான தருணங்களை தர தவறியது. ஆனால் கோவா அணி கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி போட்டியை டிரா செய்துள்ளது. இதன்மூலம் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
|
95வது நிமிடத்தில் பரபரப்பு
இதனிடையே போட்டியின் 95வது நிமிடத்தில் பந்தை பிடிப்பதற்காக தீபக் தாங்கிரி மற்றும் எது பேடியா முயற்சி செய்தபோது, சென்னையின் எப்சி மிட் பீல்டர் தீபக் தாங்க்ரி, எது பேடியா மீது பாய்ந்தார். இதையடுத்து அவர் எழ முயற்சி செய்தபோது, எது பேடியா அவரை வயிற்றில் கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
எது பேடியாவிற்கு தடை
இந்த சம்பவம் குறித்து சென்னையின் எப்சி புகார் அளித்துள்ளது. மேலும் அதற்கான வீடியோ ஆதாரத்தையும் அளித்துள்ள நிலையில், இந்த தொடரின் அடுத்து நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க எது பேடியாவிற்கு தடை விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.