அரையிறுதிப் போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் லீக் சுற்று போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து இன்றைய தினம் முதல் சுற்று அரையிறுதிப் போட்டி படோர்டாவின் பிஜேஎன் மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் எப்சி கோவா மற்றும் மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன.
எப்சி கோவாவின் மாற்றம்
இந்த போட்டியில் எப்சி கோவா அணி தனது முக்கியமான இரு வீரர்கள் இல்லாமல் போட்டியிட உள்ளது. அணியின் இவான் கோன்சாலஸ் மற்றும் மிட்பீல்டர் ஆல்பர்ட்டோ நோகெரா ஆகியோர் சஸ்பெண்ட் ஆகியுள்ள நிலையில் அவர்கள் இல்லாமல் இந்த போட்டியை அந்த அணி எதிர்கொள்கிறது.
சிறப்பாக முடித்த மும்பை அணி
மாறாக மும்பை அணியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த ஹுகோ பௌமஸ் மீண்டும் அணியில் இணைந்துள்ளார் இதையடுத்து அந்த அணி இன்றைய போட்டியை சிறப்பாக எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் கடந்த போட்டியில் ஏடிகே மோஹுன் பகன் அணியை 2க்கு 0 என்ற கோல் கணக்கில் வெற்றி கொண்டு லீக் சுற்றை வெற்றியுடன் அந்த அணி முடித்துள்ளது.
வெற்றியை தொடர தீவிரம்
இதனிடையே எப்சி கோவா அணி கடந்த 13 போட்டிகளில் சிறப்பான வெற்றியுடன் உள்ள நிலையில், இன்றைய போட்டியிலும் அதை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையிலான இன்றைய போட்டி இரவு 7.30 மணிக்கு துவங்கவுள்ளது.