தற்போதைய நிலை
இந்நிலையில் அணியின் தற்போதைய சூழல் குறித்து தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
தயாராக உள்ளோம்
உலக கோப்பை போட்டிக்கு மனரீதியாக இந்திய அணி வீரர்கள் தயாராக உள்ளனர். உலக கோப்பைக்கு 15 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்ய முடியும். ஆனால் தற்போது 18 முதல் 20 வீரர்கள் வரை தகுதியுடன் உள்ளனர்.
காயம் குறித்து கவலை
ஐபிஎல் முடிந்தவுடன் உலக கோப்பை போட்டி தொடங்குகிறது. ஐபிஎல் போட்டியின்போது வீரர்கள் யாராவது காயம் அடைந்தால் அது கவலை அளிக்கும் விஷயமாக இருக்கும். அதனால் ஒவ்வொரு போட்டியையும் நான் கூர்ந்து கவனிப்பேன்.
தக்க முடிவு
உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது பற்றி கிரிக்கெட் வாரியம் மற்றும் மத்திய அரசு தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் தக்க முடிவு எடுப்பார்கள்.
கட்டுப்படுவோம்
மத்திய அரசு என்ன முடிவு எடுக்கிறதோ அதை பின்பற்றுவோம். ஒருவேளை உலக கோப்பையில் விளையாட வேண்டாம் என்று கூறினாலும் அதற்கு கட்டுப்படுவோம்.
ஜெயிக்க இருக்கிறோம்
விராட் கோலியின் ஆக்ரோஷத்தை நான் ஊக்குவிப்பதாக கேள்வி கேட்கிறார்கள். அது உண்மைதான். இங்கு ஜெயிக்கவே வந்திருக்கிறோம். அதனால் கடுமையான ஆட்டத்தை விதிமுறைக்குள் வெளிப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.