இந்தியா வெற்றி
தொடர்ந்து மழை பெய்ததால் டக்வொர்த் லீவிஸ் விதி கடைபிடிக்கப்பட்டு இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த இரு வெற்றிகளால் தொடரை 2க்கு பூஜ்யம் என கைப்பற்றியது.
இந்தியா முனைப்பு
இந்திய அணி கடைசி மற்றும் 3வது ஆட்டத்தில் இன்று களமிறங்குகிறது. இந்த ஆட்டம் வெஸ்ட் இண்டீசின் கயானாவில் நடக்கிறது.டைபெறுகிறது. இந்த ஆட்டத் திலும் வெற்றி பெற்று தொடரை 3க்கு பூஜ்யம் என முழுமையாக கைப்பற்றுவதில் இந்தியா முனைப்பு காட்டக்கூடும்.
இளம்வீரர்கள்
தொடரை கைப்பற்றிவிட்டதால் சோதனை அடிப்படையில் சில முடிவுகளை எடுக்க இருக்கிறது. இதனை சூசகமாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார் கேப்டன் விராட் கோலி. அவர் கூறியதாவது: போட்டியில் ஜெயிப்பதுதான் எங்களுக்கு மிக முக்கியம். 2 போட்டிகளில் வென்று தொடரை கைப்பற்றி விட்டோம். அதனால் புதிய வீரர்கள் விளையாட வாய்ப்பு உள்ளது என்றார்.
இருவரில் ஒருவர்
அதன்படி, தொடக்க வீரர்களில் ரோகித் சர்மா அல்லது ஷிகர் தவானுக்கு ஓய்வு வழங்கிவிட்டு அந்த இடத்தில் கே.எல். ராகுல் வர வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலையில் தவான் வெளியில் அமரவைக்கப்படலாம். தோனி இல்லாத நிலையில் அவர் இடத்துக்கு கொண்டு வரப்பட்ட ரிஷப் பன்டும் பெரிதாக சோபிக்கவில்லை.
வாய்ப்பு கிடைக்குமா?
எனவே அவரும் கழற்றிவிடப்படுவார் என்று நம்பலாம். பவுலிங்கில் சகோதரர்களான தீபக் சாஹர், ராகுல் சாஹர் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்க வாய்ப்புள்ளது. இவர்கள் களமிறங்கும் பட்சத்தில் நவ்தீப் சைனி, கலீல் அகமது, ரவீந்திர ஜடேஜா ஆகி யோரில் இருவர் வெளியே அமர வைக்கப்படக் கூடும். ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் வென்றால் தொடரை கைப்பற்ற முடியாது. ஆனால் அடுத்து வரக்கூடிய போட்டிகளுக்கு உத்வேகமாக அமையும்.