ஆஸி. தொடக்கம்
போட்டிக்கான டாஸ் இரு அணி கேப்டன் முன்னிலையில் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலிய அணியை முதலில் பேட்டிங் செய்யுமாறு பணித்தார்.
நிதானமாக ஆட்டம்
தொடக்க வீரர்களாக பின்ச்சும், கவாஜூம் களம்இறங்கினர். வென்றாக வேண்டிய போட்டி என்பதால் மிக நிதானமாக ஆஸ்திரேலியா ஆட்டத்தை தொடர்ந்தது.
எளிதாக ரன்கள் சேர்ப்பு
இருவரும் இந்திய பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் அணியின் மற்ற வீரர்களை கட்டுப்படுத்தலாம் என்ற கோணத்தில் இந்திய வீரர்கள் பந்துவீசினர்.
50 ரன்கள்
ஆனால்.... பின்சும், கவாஜூம் பந்துவீச்சை அழகாக எதிர்கொண்டு ரன்களை சேர்த்தனர். 59 பந்துகளில் ஆஸ்திரேலியா அணி 50 ரன்களை எட்டியது. 17வது ஓவரில் 100 ரன்களை கடந்தது.
நிதானமாக ஆடிய பின்ச்
பின்ச்சும், கவாஜூம் அருமையான தொடக்கம் தந்தனர். கடந்த பல போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிய பின்ச் நிதானமாகவும், அதே நேரத்தில் நேர்த்தியாகவும் ஆடினார்.
பார்முக்கு வந்த பின்ச்
6 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் 51 பந்துகளில் 50 ரன்களை எடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். கடந்த 10 இன்னிங்சுகளில் அரைசதம் எடுக்காமல் தடுமாறிய அவர், ராஞ்சி ஆட்டத்தில் அரை சதத்தை கடந்தது அணியினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.