இன்ஸ்டாகிராம்
தற்போது அந்த இரு ஜெர்சிகளை தன் கையால் பிடித்தபடி எடுத்து கொண்டுள்ள புகைப்படத்தை ஆரோன் பின்ச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
நன்றி கூறுகிறேன்
அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைத்து காலத்திலும் சிறந்தவர்களாக போற்றப்படும் வீரர்கள் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு நன்றி. இந்த இரு வீரர்களுடன் விளையாடிய தருணங்கள் சிறப்புமிக்கவை. அந்த நேரங்கள் தனக்கு கிடைத்ததற்காக பெருமை கொள்கிறேன் என்று பின்ச் தெரிவித்துள்ளார். அவரது புகைப்படம் மற்றும் பதிவு வைரலாக பரவி வருகிறது.
உலக கோப்பை கிரிக்கெட்
அடுத்த மாதம் 30ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை துவங்கவுள்ளது. அதில் முதல் லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி , 2வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.
வருகையால் பலம்
இதில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளாக கருதப்படுவதால் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் அந்த அணியின் நட்சத்திர் வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் வருகை அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.