டெல்லி: பல்வேறு புதிய விதிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சமீபத்தில் கொண்டு வந்தது. இந்த புதிய விதிகளில் சிக்கிய முதல் வீரர், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அணியின் லாபஸ்சாக்னே. இவருடைய செய்கையால் எதிரணிக்கு, 5 ரன்கள் கிடைத்தது.
கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு புதிய விதிகளை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. பேட்டின் அளவு, ஆக்ரோஷமாக விளையாடும் வீரருக்கு, கால்பந்தில் உள்ளது போல் ரெட் கார்டு கொடுப்பது உள்பட பல்வேறு புதிய விதிகளை ஐசிசி கொண்டு வந்துள்ளது.