சர்ச்சைக்குரிய கேட்ச்
ஸ்மித் விளையாடாத போது, அவருக்கு பதிலாக மாற்று வீரராக களம் கண்டவர் மார்ஸ் லாம்பஷே. அவரும் அழகாக அரைசதம் அடித்தார். ஆனால், அவரும் அவுட்டானார். அவர் ஆட்டமிழக்கக் காரணமானது ஜோ ரூட் பிடித்த சர்ச்சைக்குரிய கேட்ச்.
வாக்குவாதம் செய்தார்
காரணம்... அந்த கேட்ச் ரீப்ளேயில் பார்த்த போது தரையில் பட்டுத்தான் பிடித்தார் என்பது தெரிந்தது. அதனால் மார்ஷ் லாம்பஷே கோபப்பட்டு, ஜோ ரூட்டிடம் வாக்கு வாதமும் செய்தார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.
முன்னாள் வீரர் புகார்
இந்த சம்பவம் குறித்து ஆஸி. முன்னாள் வீரர் ஆண்டி பைச்சல், சில குற்றச் சாட்டுகளை முன் வைத்து இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: அந்த பந்து நேரடியாக தரையில் படாமல் செல்லவில்லை. கேட்ச்சை தரையில் பட்டுத்தான் எடுத்தோம் என்பதை ரூட்டுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
மோசமானது
மைதானத்தில் கேட்ச் பிடிக்கும் போது, அது பீல்டருக்குத் தெரியாமல் நிச்சயம் இருக்கவே இருக்காது. எனவே, ரூட் செய்தது ஒரு வெளிப்படையான ஏமாற்று வேலை. இதைவிட மோசமானது ஒன்று இருக்கிறது. ரீப்ளேயை மார்ஷ் லாம்பஷே பார்த்து ரூட்டிடம் வாக்கு வாதம் செய்தார்.
தவறு செய்கிறார்
அதன் பிறகும் அவரை ஏன் வெளியே அனுப்புவதில் குறியாக இருந்தார். அது மிகப்பெரிய தவறு. ஜோ ரூட்டுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. சமீப காலமாக அவர் பேட்டிங்கில் சொதப்புகிறார். ரன்கள் எடுப்பதில்லை, கடும் மன அழுத்தத்தால், இது போன்ற தவறுகளை அவர் செய்து வருகிறார் என்றார்.