சென்னை: ஐசிசி சேர்மன் என்.சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான சீனிவாசன், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராகவும் பதவி வகிப்பது சரியில்லை என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதை தொடர்ந்து அந்த பதவியை ஜக்மோகன் டால்மியாவுக்கு விட்டுக்கொடுத்தார் சீனிவாசன்.
அதேநேரம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சேர்மனாகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகவும் சீனிவாசன் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 85வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. சீனிவாசன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருமனதாக இந்த தேர்வு நடைபெற்றது.
செயலாளராக காசி விஸ்வநாதனும், பொருளாளராக வி.பி.நரசிம்மனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்பதவிகளுக்கான காலம், ஓராண்டாகும்.