சச்சினுக்கு நோட்டீஸ்
முன்னாள் இந்திய வீரர்கள் மீது இதுபோன்று இவ்வாறு குற்றச்சாட்டுகள் கூறுவது முதல் முறையல்ல. முன்னதாக, பிசிசிஐ கிரிக்கெட் ஆலோசனைக் கமிட்டியில் இருந்து கொண்டு, மும்பை இந்தியன்ஸ் ஐகானாகவும் செயல்படுவதாக சச்சின் மீது குற்றம்சாட்டியது.
பிசிசிஐயிடம் விளக்கம்
இது குறித்து பிசிசிஐயிடம் விளக்கம் ஒன்றும் அளிக்கப்பட்டது. அதில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு வழிகாட்டியாக மட்டுமே செயல்படுகிறார். அதற்காக எந்தவித பலனையும் பெறுவதில்லை என்று விளக்கமளித்த அதன் பின்னரே அந்த பிரச்சனை முடிவுக்கு வந்தது.
கங்குலி டுவிட்டர்
இதேபோல ஏற்கெனவே கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோருக்கும் பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதுபற்றி ட்விட்டரில் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார் கங்குலி.
|
பேஷனாகிவிட்டது
அவர் கூறியிருப்பதாவது: இந்திய கிரிக்கெட்டில் உலகில் இது ஒரு புதிய பேஷனாக போய்விட்டது. எப்போதும் செய்திகளில் இடம்பிடிக்க இது ஒரு சிறந்த வழி. கடவுள்தான் இந்திய கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்று சாடியிருக்கிறார்.