சிறந்த ஆட்டக்காரர்
விக்கெட் கீப்பராக இருந்தாலும் சிறப்பான ஆட்டத்திற்கு சொந்தக்காரர் எம்.எஸ். தோனி. கேப்டனாகவும் தன்னை நிரூபித்து உலக கோப்பையை இந்தியாவிற்கு பரிசளித்த தோனி, அணியில் 6வது ஆட்டக்காரராக களமிறங்கி, அந்தப் போட்டியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்குவார்.
சர்வதேச ஆட்டத்தில் விலகிய தோனி
கடந்த உலகக்கோப்பை போட்டியில் பதக்கம் வெல்லாமல் இந்திய அணி வெளியேறியது. அதிலிருந்து இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில் இருந்து தோனி விலகியுள்ளார்.
மனம்திறந்த தோனி
இந்நிலையில் அணியில் தான் இறங்கி விளையாடும் 6வது இடம் குறித்து தோனி தற்போது மனம் திறந்துள்ளார். பிராக்டிகலாக ஒரு விஷயத்தை அணுகுவதே வெற்றிக்கு இடமளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிறந்த வெற்றியை அடையலாம்
குருகிராமில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், நடைமுறைக்கு உகந்த எண்ணம் மற்றும் செயல்பாடே சிறந்த வெற்றியை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவை பிரதிபலிப்பது மகிழ்ச்சி
இந்தியாவிற்காக விளையாடுகிறோம் என்ற எண்ணம் முக்கியமாக மனதில் இருக்க வேண்டும். இதற்காக பிராக்டிகலாக யோசித்து சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
நடைமுறை சிக்கல்களும் ஏற்படலாம்
தான் இறங்கி விளையாடும் 6வது இடம் குறித்து பேசிய தோனி, 6வது இடத்தில் இறங்கி, 15 பந்துகளில் 30 ரன்களை அடிப்பது மிகச்சிறந்த விளையாட்டுதான் ஆனால், அதிலும் தடைக்கற்கள் ஏற்படலாம் என்பதை நினைவில் கொண்டு விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.