நல்ல அணி இருக்கிறது
இது பற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்த உலக கோப்பையை வெல்ல அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல அணி நம்மிடம் இருக்கிறது. சிறப்பாக பவுலிங் வீசுபவர்களை பெற்றிருக்கிறோம். பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளம்... அது இந்திய அணிக்கு பாதிப்பு என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
துல்லிய பந்துவீச்சு
எதிரணி பேட்ஸ்மென்களின் விக்கெட்டுகளை வீழ்த்த துல்லியமான பந்து வீச்சாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர். ஆக சிறந்த அணியை வைத்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில், உலக கோப்பையை வெல்லவில்லை என்றால் நான் மிகுந்த அதிருப்தியடைவேன் என்று கூறினார்.
சிறப்பான ஆட்டம்
உலக கோப்பை தொடர் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. கோலி தலைமையிலான இந்திய அணி சில ஆண்டுகளாக சிறப்பான பார்மில் இருக்கிறது. முன் எப்போதையும் விட வேகப்பந்து வீச்சு பக்காவாக இருக்கிறது.. பும்ரா, புவனேஷ்வர் குமார்,சமி ஆகியோர் எதிரணிகளை அச்சுறுத்துவர்.
ஸ்பின் பவுலிங் சூப்பர்
சுழலில், குல்தீப், சாஹல் ஜோடி அற்புதமான பார்மில் இருக்கிறது. பேட்டிங்கும் வலுவாக உள்ளதால் ரசிகர்களும் இந்தியா தான் உலக கோப்பை சாம்பியன் என்று ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.
நெருக்கடி ஏற்படுத்தும்
இந்திய அணி மீதான அனைவரும் வைத்திருக்கும் நம்பிக்கையே, வீரர்களுக்கு ஒரு விதத்தில் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வீரர்கள் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி, ஒவ்வொரு போட்டியையும் முக்கியமாக கருதி விளையாட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு.