கபில்தேவ் ஆதரவு
சூழலுக்கு ஏற்றவாறு விராட் கோலியை நான்காம் வரிசையில் இறக்குவதற்கான திட்டங்களை கூட இந்திய அணி வைத்துள்ளது. 4ம் வரிசையில் சூழலுக்கு ஏற்றவாறு எந்த வீரரையும் எந்த வரிசையிலும் இறக்கலாம். அனைவருமே சிறந்த வீரர்கள் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவும் கூறியிருந்தார்.
ராகுல் தான் சரி
இந்நிலையில், ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிவரும் கேஎல் ராகுலையே உலக கோப்பையில் நான்காம் வரிசையில் களமிறக்கலாம் என முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
நம்பிக்கையில் ராகுல்
கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடியவர் ராகுல். அதற்கு பிறகு பல சீசன்களில் சொதப்பினார். பார்மில் இல்லாமல் தவித்துவந்த ராகுல், ஐபிஎல்லில் நம்பிக்கையோடு விளையாடி வருகிறார்.
2வது இடம்
இதுவரை 317 ரன்களை குவித்து, இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் வார்னருக்கு அடுத்து 2வது இடத்தில் இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார்.
ஏன் என்று தெரியவில்லை
ராகுல் ஏற்கனவே நான்காம் வரிசையில் இறங்கி ஆடியிருக்கிறார். பின்னர் ராகுலை அந்த இடத்தில் இறக்காதது ஏனோ தெரியவில்லை. ஆனால் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிவருகிறார் ராகுல்.
பலன் கிடைக்கும்
தொடக்க வீரரால் மிடில் ஆர்டரில் இறங்குவது ஒன்றும் பிரச்னை இல்லை. தொடக்க வீரராலும் மிடில் ஆர்டரில் நன்றாக பேட் செய்ய முடியும். அதனால் ராகுலை 4ம் வரிசையில் இறக்கலாம், நிச்சயம் பலன் கிடைக்கும் என்று கூறி உள்ளார்.