டெல்லி: இந்திய அணியின் முன்னாள் வீரரும், லோக் சபா எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளன.
கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பிரபலங்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் முன்னாள் வீரர் சௌரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், குறைந்த அறிகுறிகளுடன் தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்றும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ளுங்கள் எனவும் தெரிவித்துள்ளார். கம்பீர் தற்போது வீட்டிலேயே தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதத்திலும் கவுதம் கம்பீர் தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டிய சூழல் உருவானது. அவரின் குடும்பத்தார் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவர் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துக்கொண்டு குவாரண்டைன் செய்துக்கொண்டார். எனினும் அப்போது கொரோனா உறுதியாகவில்லை.
கடந்த 2018ம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்ற கவுதம் கம்பீர், முழு நேர அரசியல்வாதியாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் வரும் ஐபிஎல் தொடரில் மீண்டும் கிரிக்கெட்டிற்குள் நுழையவிருக்கிறார். புதிதாக வந்துள்ள லக்னோ அணியின் ஆலோசகராக அவர் செயல்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
“நியாயமே இல்லாம நடந்துக்குறாங்க” இளம் வீரரை புறக்கணித்த இந்திய அணி.. விளாசிய ஆகாஷ் சோப்ரா!