முக்கிய வீரர்கள் இல்லை
இந்த போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்கள் கொண்ட அணியை வைத்துக்கொண்டு அஜிங்கியா ரகானே நியூசிலாந்தை எதிர்கொண்டு வருகிறார். இதில் எப்படி சமாளித்து வெற்றி பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
வெற்றி சிரமம் தான்
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது கடினம் தான் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் ஸ்மித் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாதது பின்னடைவு. அவர்கள் இல்லாதது
எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. இருவரது வெற்றிடம் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
ஆவலுடன் உள்ளேன்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது முதல் இந்திய அணிக்காக அவர்கள் இருவரும் தூண் போன்று நின்று விளையாடி வருகிறார்கள். அந்த முக்கிய வீரர்கள் நியூசிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாதது நியூசிலாந்து அணிக்கு சற்று சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. இவர்கள் இருவரும் இன்றி இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்பதை பார்க்க தான் ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சாதனை
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை இழக்காமல் விளையாடி வருகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளது. தொடக்க வீரர் சுப்மன் கில் அரைசதம் அடித்து ரோகித்தின் இடத்தை பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.