For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விராட் கோலியின் சிக்கல்..... தொடர்ந்து வலுக்கும் கேப்டன்சிக்கு சர்ச்சை.... முன்னாள் வீரர் காட்டம்!

மும்பை: இந்திய அணிக்கு வேறு கேப்டனை நியமிக்க வேண்டு என வலுத்து வந்த பேச்சுக்கு முன்னாள் வீரர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விராட் கோலி சரியாக கேப்டன்சி செய்யவில்லை என்றும் ஒவ்வொரு வடிவ போட்டிக்கும் தனி தனியாக கேப்டன்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது.

இந்நிலையில் இந்திய அணிக்கு வேறு கேப்டனை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை என முன்னாள் வீரர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

கோலி மீது விமர்சனம்

கோலி மீது விமர்சனம்

விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி பல தொடர்களை வென்ற போதிலும் சர்வதேச கோப்பைகள் ஒன்றை கூட இதுவரை பெறவில்லை. இது அவர் கேப்டன்சி மீது பெரும் விமர்சனத்தை கிளப்பியது. கோலிக்கு பதில் வேறு கேப்டன் மாற்ற வேண்டும் என பேச்சு சற்று காலம் அவை அமைதிபெற்ற நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் இருந்து மீண்டும் கிளம்பியது.

சர்ச்சை

சர்ச்சை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கோலி கேப்டன்சியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆனால் அதன் பின்னர் கோலி இந்தியா திரும்பியவுடன் ரஹானேவின் கேப்டன்சியில் இந்திய அணி தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதே போல இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியின் போது கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி தோல்வியை நோக்கி சென்றது. பின்னர் ரோகித்தின் கேப்டன்சியில் அபார வெற்றி பெற்றது. இவை மீண்டும் கேப்டன்சி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எதிர்ப்பு

எதிர்ப்பு

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் வீரர் சரண் தீப் சிங், ஒவ்வொரு வடிவ கிரிக்கெட்டிற்கு தனி தனி கேப்டன்சி என்பது அணியின் கேப்டன் சரியாக விளையாடவில்லை என்ற போது எடுக்கப்படும் முடிவாகும். ஆனால் விராட் கோலி கேப்டன்சி அழுத்ததிலும், 3 வடிவ போட்டிகளிலும் சராசரி 50 ரன்களுக்கு மேல் வைத்துள்ளார். எனவே கேப்டன் மாற்றம் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் தொடரில் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வெல்லவில்லை. ஆனால் மறுபுறம் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 5 முறை கோப்பை வென்று அசத்தியுள்ளது. இதனால் இந்திய டி20 அணிக்கும் ரோகித் கேப்டனாக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

சரண் தீப் சிங் காட்டம்

சரண் தீப் சிங் காட்டம்

இதுகுறித்து பதிலளித்துள்ள சரண் தீப் சிங், ஐபிஎல்-ல் கோப்பை வென்று தரவில்லை என் காரணத்திற்காக எல்லாம் இந்திய அணியின் கேப்டனை மாற்ற முடியாது. விராட் கோலி மிக ஃபிட்டான வீரரும் கேப்டனும் ஆவார். அவரை மாற்ற எந்த காரணமும் இல்லை. எனவே விராட் கோலிதான் கேப்டனாக செயல்படுவார், அவர் இல்லாத போது ரோகித்சர்மா கேப்டனாக செயல்படுவார்.

Story first published: Thursday, April 1, 2021, 17:47 [IST]
Other articles published on Apr 1, 2021
English summary
Former Cricketer Sarandeep Singh on split-captaincy debate for Indian Team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X