பயிற்சிக்காலம் முடிந்தது
இங்கிலாந்து உலக கோப்பை தொடருடன் சங்கர் பாசுவின் பதவிக்காலம் முடிவடைந்தது. அவரது உடற்பயிற்சியின் கீழ் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு தங்கள் உடல் வலிமையோடு தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் இருந்து வந்தனர். சங்கர் பாசு பதவி காலம் முடிவடைந்தால் இந்திய அணியை விட்டு விலகினார்.
வீரர்கள் வலிமை
இந்நிலையில் தற்போது அவர் இந்திய அணி வீரர் குறித்தும் அவர்களது வலிமை குறித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியை பொறுத்த வரைக்கும் கேப்டன் கோலி அணியின் மற்ற வீரர்கள் அனைவருக்கும் முன் உதாரணம்.
கடுமையான பயிற்சி
ஏனெனில் கடந்த 2 வருடங்களில் அவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் உடற்பயிற்சி செய்து வந்தார். எந்தவித சாக்குபோக்கும் சொல்லாமல், அவரது உடற் தகுதியில் மிக கவனமாக இருந்தார்.
சிறப்பான செயல்பாடு
நான் உடற்பயிற்சி அளிக்க தொடங்கியதில் இருந்து, கடுமையாக உடற்பயிற்சி செய்தார் அதனாலே அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடிகிறது. மேலும் அவரிடம் உள்ள பிட்னஸ் மற்ற உலக அணிகள் திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது என்றார்.