ரகசிய தகவல்
இந் நிலையில், ஐபிஎல் சூதாட்டத்தில் அவர் ஈடுபட்டதாக வதோதரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வதோதராவில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஐபிஎல் சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சோதனையில் கைது
இதையடுத்து, தனிப்படையினர் அந்த ஓட்டலுக்குள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டுஷார் அரோத்தே கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 பேர் கைது, பறிமுதல்
அவருடன்... 18 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அனைவரிடம் இருந்தும், போன்கள் மற்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம் இது தொடர்பான விசாரணை நடத்தப் படும் போது பல முக்கிய தகவல்கள் வெளியாகும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகம் அதிர்ச்சி
ஐபிஎல் சூதாட்ட புகாரில் மகளிர் கிரிக்கெட் முன்னாள் பயிற்சியாளரே கைது செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இந்த சம்பவம் மிக முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.