புதிய சர்ச்சை
இந்த விவகாரத்தில் தற்போது விராட் கோலிக்கு பிசிசிஐ துரோகம் செய்துள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டன்சியில் இருந்து தாமாக பதவி விலகிய கோலி, ஒருநாள் அணியை தொடர்ந்து வழிநடத்தவே விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத பிசிசிஐ 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும், இல்லையென்றால் நீக்கப்படுவீர்கள் என கெடு விதித்து அனைத்தையும் செய்துள்ளது. எனினும் இதுகுறித்த உண்மை தன்மை தெரியவில்லை.
சாபா கரீம் பதில்
இந்நிலையில் இவை முற்றிலும் உண்மை என இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் சாபா கரீம் கூறியுள்ளார். அதில், விராட் கோலி அதிரடியாக பதவியில் இருந்து தூக்கப்பட்டார் என்பதே சரியாக இருக்கும். ஏனென்றால் டி20 கேப்டன்சியில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்ட போதே, ஒருநாள் அணி குறித்து கோலி தெரிவித்திருக்கலாம். அவர் தொடர்ந்து ஒருநாள் அணியை வழிநடத்த விரும்பியதால் தான் அதனை செய்யவில்லை.
கேப்டன்சி
விராட் கோலி சிறந்த ஒருநாள் அணி கேப்டனாக இருந்துள்ளார். இதுவரை 95 போட்டிகளில் 65 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அவரின் வெற்றி சதவீதம் 70.43 ஆகும். ஆனால் கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானிடம் தோற்றது, 2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் நியூசிலாந்திடம் தோற்றது ஆகியவை அவரை பதவி நீக்கம் செய்ய காரணமாகிவிட்டது.
Recommended Video
பின்னணியில் டிராவிட்
என்னைப் பொறுத்தவரை ராகுல் டிராவிட் அல்லது வேறு யாரேனும் ஒருவர் விராட் கோலியின் பதவி பறிப்புக்கு பின்னால் உள்ளனர் என நினைக்கிறேன். இந்திய அணியில் தனி தனி கேப்டன்சி என்ற முறையை விராட் கோலியிடம் பயிற்சியாளர் டிராவிட் எடுத்துக்கூறியிருக்கலாம். அவரிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்திருக்கலாம். இப்படிப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்றால் டிராவிட் நிச்சயம் பின்னர் இருந்து பேசியிருப்பார்.