சர்ச்சை முடிவுக்கு வருமா?
பிசிசிஐ புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதன் மூலம் ரமேஷ் பவார் - மிதாலி ராஜ் சர்ச்சையை முடிவுக்கு கொண்டு வந்து விடலாம் என எண்ணுகின்றனர். ஆனால், ரமேஷ் பவார் மீண்டும் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பம் செய்தவர்கள்
ரமேஷ் பவாருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்காது என்றே கூறப்படுகிறது. தற்போது இந்திய முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர், பிற நாட்டு முன்னாள் வீரர்கள் ஹெர்ஷெல் கிப்ஸ், மாஸ்கரனஸ், வங்கதேசம், பாகிஸ்தான் நாட்டு அணிகளுக்கு பயிற்சியாளராக இருந்த டேவ் வாட்மோர் ஆகியோர் விண்ணப்பம் செய்து இருந்தனர்.
அதிரடியாக வந்த கேரி
இவர்களில் யார் பயிற்சியாளராக வருவார்கள் என பலரும் விவாதித்துக் கொண்டு இருந்த நிலையில், அதிரடியாக இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் மகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
கேரி கிர்ஸ்டனை மறக்க முடியுமா?
கேரி கிர்ஸ்டன் தலைமையில் தான் இந்தியா 2011 உலகக்கோப்பை வென்றது. இந்திய ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படும் ஒரு பயிற்சியாளர் என்றால் அது கேரி கிர்ஸ்டன் தான். இது போன்ற சிறப்பு வாய்ந்த இவரை தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக நியமிப்பார்கள் என தற்போது கூறப்படுகிறது.
கேரி அனுபவம்
கேரி கிர்ஸ்டன் இந்திய அணிக்கு பயிற்சி அளித்த பின்னர் தன் சொந்த நாட்டு அணியான தென்னாபிரிக்க அணிக்கு பயிற்சி அளித்தார். தற்போது ஐபிஎல் அணியான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு பயிற்சியாளராக இருக்கிறார்.