ஒதுக்கப்பட்ட முரளி
தமிழகத்தை சேர்ந்த் பல பேர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் இருந்து ஓரம்கட்டப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவராக முரளி விஜயை கூறலாம். இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டவர்.
நிர்வாகம் பேச்சுவார்த்தை
தற்போது சேர்ந்த முரளிவிஜய், இங்கிலாந்தில் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட உள்ளார். அங்குள்ள சோமர்செட் அணி நிர்வாகம் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
விரைவில் கையெழுத்து
தமிழக கிரிக்கெட் சங்கம் ஒப்புதல் அளித்ததும் அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார். அவர் ஆடுவது உறுதி செய்யப்பட்டால் இந்த கவுண்டி சாம்பியன்ஷிப்பில் எஞ்சிய 3 ஆட்டங்களில் களம் இறங்குவார்.
சதத்தை கோட்டைவிட்டவர்
முன்னதாக, தமிழ்நாடு ப்ரீபியர் லீக் சுற்றில் திருச்சி அணியின் சார்பாக விளையாடியவர் முரளி விஜய். அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் பந்தில் அவுட்டாகி ஒரு ரன்னில் சதத்தை கோட்டை விட்டார். அந்த போட்டியில் அஸ்வினின் 16வது ஓவருக்கு முந்தைய ஓவரில் அவர் மைதானத்தில் குறும்பாக நடனமாடியதை ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறக்க மாட்டார்கள்.