டாக்கா: வங்கதேச அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து ஒருநாள் உலக கோப்பையில் வங்கதேச அணி 8ம் இடத்தை பிடித்தது.எனினும் தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான் அணிகளுடன் மட்டுமே வெற்றியை பெற்றது வங்கதேசம்.
ஆஸ்திரேலியாவில் வரும் 2020ல் நடைபெறவுள்ள டி20 உலக கோப்பை போட்டி வரை தலைமை பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்சுக்கு ஒப்பந்தம் உள்ளது. ஆனால் அவரை பதவியில் இருந்து விடுவிப்பதாக அந்நாட்டு வாரிய தலைமை செயல் அலுவலர் நிஜாமுதீன் சவுத்ரி கூறியுள்ளார்.
இதையடுத்து, இலங்கையில் நடக்கவுள்ள கிரிக்கெட் தொடரில் அணியுடன் ரோட்ஸ் செல்லவில்லை. இந் நிலையில், இத்தொடருக்கான பேட்டிங் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரை வங்கதேச அணி நியமித்துள்ளது.
அவர் இந்தியா சார்பாக 31 டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றவர். பேட்டிங் பயிற்சியாளாராக இலங்கையின் முன்னாள் வீரர் செம்பகா ரமனநாயகா நியமிக்கப்பட்டுள்ளார்.