For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆண்டுக்கு 2 ஐபிஎல் தொடர்கள்.. பிசிசிஐ-க்கு முன்னாள் வீரர்கள் விட்ட தூது ரசிகர்களுக்கு விருந்து ரெடி!

மும்பை: ஒரு வருடத்திற்கு 2 ஐபிஎல் தொடர்களை நடத்த வேண்டும் என்ற ஆலோசனைகள் சூடுபிடித்துள்ளது.

கடந்த 2 மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஐபிஎல் 15வது சீசன் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுக சீசனிலேயே கோப்பையை வென்று அசத்தியது.

ஹர்திக் பாண்ட்யாவுக்கு பேட்டிங்கில் புது இடம்.. 3 வீரர்களின் இடத்திற்கு ஆப்பு..சீனியர் சூப்பர் ஐடியா ஹர்திக் பாண்ட்யாவுக்கு பேட்டிங்கில் புது இடம்.. 3 வீரர்களின் இடத்திற்கு ஆப்பு..சீனியர் சூப்பர் ஐடியா

2 ஐபிஎல் தொடர்

2 ஐபிஎல் தொடர்

2 மாதங்களாக திருவிழாவை போன்று ரசித்து வந்த ரசிகர்கள் இனி அடுத்த ஐபிஎல் எப்போது என காத்துள்ளனர். இந்நிலையில் இனி வருடத்திற்கு 2 ஐபிஎல் தொடர்களை நடத்துவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனை முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, ஆகாஷ் சோப்ரா, டேனியல் விட்டோரி, இயான் பிஷப் உள்ளிட்டோர் முன்வைத்துள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

சர்வதேச டி20 போட்டிகளில் ரசிகர்களுக்கு ஆர்வம் குறைந்து வருகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க போன்ற நாடுகள் ஆடும் போது சுவாரஸ்யமாக உள்ளன. ஆனால், இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் அணிகள் ஆடுகையில், அதிரடிகள் நிறைந்த டி20 போட்டிகளில் தொடக்கத்திலேயே ஒரு அணிக்கு சார்பாக வெற்றி சென்றுவிடுகிறது. எனவே சர்வதேச டி20க்களை குறைத்துவிட்டு ஐபிஎல்-ஐ அதிகரிக்க திட்டம் போடப்பட்டுள்ளது.

ரவிசாஸ்திரியின் பேச்சு

ரவிசாஸ்திரியின் பேச்சு

இதுகுறித்து பேசிய ரவிசாஸ்திரி, இந்தியாவின் பயிற்சியாளராக இருந்தபோது தரமில்லாத டி20 போட்டிகள் நடப்பதை நேரடியாகப் பார்த்தேன். எனவே

கால்பந்தாட்டத்தை போல உலகக்கோப்பையில் மட்டும் சர்வதேச டி20 போட்டிகளை வைத்துவிட்டு, ஐபிஎல் போன்ற உள்நாட்டு தொடர்களை அதிகரிக்க வேண்டும். ஏனென்றால் உலகக்கோப்பையை தவிர மற்ற சர்வதேச டி20 போட்டிகளை ரசிகர்கள் நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.

 பிசிசிஐ-ன் முடிவு என்ன

பிசிசிஐ-ன் முடிவு என்ன

இதற்கு முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவும் ஆதரவளித்து பேசியுள்ளார். அதில், ஒரு வருடத்தில் 2 ஐபிஎல் என்ற முறை விரைவில் நடைமுறைக்கு வரும் என நான் நிச்சயமாக நம்புகிறேன். அது வெகுதொலைவில் இல்லை எனக்கூறியுள்ளார். பிசிசிஐ-ம் வருமானம் அதிகரிப்பதை மனதில் வைத்து இதுகுறித்து முடிவெடுக்கும் எனத்தெரிகிறது.

Story first published: Thursday, June 2, 2022, 19:30 [IST]
Other articles published on Jun 2, 2022
English summary
2 IPL Season in one year ( ஆண்டுக்கு 2 ஐபிஎல் தொடர் ) ஆண்டிற்கு 2 ஐபிஎல் போட்டிகளை நடத்த வேண்டும் என ரவிசாஸ்திரி உள்ளிட்ட பல முன்னாள் வீரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X