பூனாவில் நாளை 3வது போட்டி
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இந்த ஆண்டின் முதல் சர்வதேச டி20 தொடரின் மூன்றாவது போட்டி நாளை பூனாவில் நடைபெறவுள்ளது. இதையடுத்து இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
டிராபிக்கில் சிக்கி தவிப்பு
இந்த போட்டியில் வர்ணனை செய்வதற்காக இலங்கை அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் ரசல் அர்னால்ட் பூனாவிற்கு வந்தபோது வரும்வழியில் தீவிர டிராபிக்கில் சிக்கினார்.
|
டிவிட்டர் தளத்தில் பகிர்வு
வரும் வழியில் போக்குவரத்தில் சிக்கிய அர்னால்ட், அதை வீடியோவாக பதிவு செய்து, எந்தப் பக்கமும் போக முடியாதபடி தான் சிக்கிய கதையை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். இதையடுத்து பூனாவில் டிராபிக் ஜாம் என்பது சகஜமான ஒன்றுதான் என்று டிவிட்டர்வாசிகள் பதிலளித்தனர்.
2வது போட்டியில் இந்தியா வெற்றி
கவுஹாத்தியில் நடைபெற்ற இந்தியா -இலங்கை இடையிலான ஆண்டின் முதல் சர்வதேச டி20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது. இந்நிலையில் பூனாவில் நாளை 3வது போட்டி நடைபெறவுள்ளது.