4 இன்னிங்ஸ்களாகப் பிரிக்கக் கூடாது
இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஷோவான கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கம்பீர் கூறுகையில், டி 20 போட்டிகளை நான்கு இன்னிங்ஸ்களாகப் பிரிக்க நான் ஆதரவு தர மாட்டேன். ஆனால் முன்பு சச்சின் டெண்டுல்கர் ஒரு யோசனையைக் கூறியிருந்தார். 50 ஓவர் போட்டிகளை பிரித்து இதுபோல விளையாடலாம் என்று கூறியிருந்தார். அது நல்ல யோசனை. அது சாத்தியமும் கூட. அதை செய்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
50 ஓவர் போட்டிகளைப் பிரிக்கலாம்
50 ஓவர் போட்டிகளைப் பிரித்தால் ஆளுக்கு 25 ஓவர்களாவது கிடைக்கும். ஆனால் டி20 போட்டிகளைப் பிரித்தால் போதிய ஓவர்கள் கிடைக்காது என்று கம்பீர் கூறினார். பிரட் லீயும் இதே கருத்தையே முன்வைத்தார். அவர் கூறுகையில், சில போட்டிகளை அப்படியே விட்டு விட வேண்டும். அதில் மாற்றம் செய்யக் கூடாது. இந்தியன் பிரீமியர் லீக்கோ இல்லை பிக் பாஷ் போட்டியோ அதை அப்படியே விட்ருங்க. டி 20 , டி20 போட்டிகளாகவே இருக்கட்டும் என்றுள்ளார்.
அபத்தமாக இருக்குமே
டி 20 போட்டிகள் இப்போதே ரசிகர்களின் பெரும் ஆதரவுடன்தான் இருக்கிறது. அதில் மாற்றம் செய்வதால் பெரிய பலன் கிடைத்து விடாது. சோதனை ரீதியாகக் கூட அதைச் செய்யத் தேவையில்லை. குறிப்பாக 20 ஓவர் போட்டிகளை நான்கு இன்னிங்ஸ்களாகப் பிரிப்பது என்பது ரொம்ப ஓவர். கேட்கவே நல்லா இல்லையே. முயற்சித்துப் பார்த்தால் ரொம்ப அபத்தமாகவே இருக்கும் என்றார் பிரட் லீ.
ஆளுக்கு 10 ஓவர்
கம்பீர் மேலும் கூறுகையில், டி 20 போட்டிகள் இப்போதே குறுகிய நேரத்தில்தான் நடக்கின்றன. அதை ஆளுக்கு 10 ஓவர்கள் என்று பிரித்து நான்கு இன்னிங்ஸ்களாக மாற்றி ஆடுவது என்பது சரியாக இருக்காது. ரசிகர்களையும் அது கவர வாய்ப்பில்லை என்றார் கம்பீர். கம்பீர் இந்திய அணியில் சிறப்பான ஆட்டக்காரராக வலம் வந்தவர். ஐபிஎல் போட்டிகளிலும் ஒரு கலக்கு கலக்கியவர் என்பது நினைவிருக்கலாம்.