இங்கிலாந்து
ஆஸ்திரேலிய தொடரை தொடர்ந்து இங்கிலாந்து தொடரிலும் பண்ட் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்திருந்தாலும் பண்ட் அடித்த 97 ரன்கள் இந்திய அணியின் தோல்வியை தடுத்தது. அதன் பின்னர் 4வது மற்றும் கடைசி போட்டியில் அவர் 89 ரன்கள் அடித்து வரலாற்று வெற்றிக்கு உதவினார்.
அதிரடி
ஆஸ்திரேலியாவில் காட்டிய அதிரடியை இங்கிலாந்து டெஸ்டிலும் பண்ட் தொடர்ந்தார். முதல் டெஸ்டில் இந்திய அணி திணறிய நிலையில் 91 ரன்களை விளாசி அனைவரையும் வியக்க செய்தார்.
அதற்கு அடுத்ததாக 2வது டெஸ்டில் அரை சதமும், 4வது டெஸ்டில் சதமும் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தார்.
கங்குலி பாராட்டு
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்த கங்குலி, ரிஷப் பண்ட் குறித்து நன்கு அறிந்த நபராவார். எனவே பண்ட்-ன் ஆட்டம் குறித்து பேசிய கங்குலி, பண்ட் குறித்து நான் நன்கு அறிவேன், அவர் ஒரு கேம் சேஞ்சர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி டிரா ஆனது. ஆனால் பண்ட் அப்போட்டியில் மேலும் ஒரு 5 - 6 ஓவர்கள் நின்று இருந்தால் இந்தியா வென்று இருக்கும்.
கேம் ஃபினிஷர்
மேலும் பேசிய அவர், பண்ட் தனியாளாக நின்று போராடி ஆட்டத்தை வென்று தரக்கூடியவர். எனக்கு யுவ்ராஜ் சிங், சேவாக், எம்.எஸ்.தோனி போன்ற கேம் ஃபினிஷர்கள் மீது நம்பிக்கை உள்ளது. எனவே பண்ட்-ம் அவர்களை போன்றவர் தான். தனியாளாக நின்று போராடி வெற்றியை பெற்றுத் தருவார் என கூறியுள்ளார்.