நினைவில் கொள்வோம்
காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தொடக்கம் முதலே விமர்சித்து வரும் நபர்களில், முக்கியமானவர் கிரிக்கெட் வீரர் அப்ரிடி. நமது பிரதமர் இம்ரான் கான் கூறியதை நினைவில் கொண்டு செயல்படுவோம்.
|
காஷ்மீர் விடுதலை
இந்த வாரம் வெள்ளிக்கிழமை 12 மணிக்கு குறிப்பிட்ட பகுதியில் நான் இருப்பேன். என்னுடன் இணைய நினைப்பவர்கள் இணைந்து கொள்ளலாம். காஷ்மீர் பகுதி மக்களுக்காகவும், விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம் என்று அண்மையில் பதிவிட்டு இருந்தார்.
கம்பீர் கண்டனம்
அதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பல முறை அப்ரிடியின் நடவடிக்கைகளை அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இப்போதும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:
|
குழந்தைகள் புத்தகம்
இந்த படத்தில் காணப்படும் சாகித் அப்ரிடி, சந்தேகம் இல்லாமல் தான் யார் என்பதை கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் இனி சந்தேகமே வேண்டாம். அவர் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. அவரது உதவிக்காக ஆன்லைனில் குழந்தைகளுக்கான புத்தகம் ஆர்டர் செய்கிறேன் என்று கிண்டலாக கூறி இருக்கிறார்.
தொடர்ந்து மோதல்
முன்னதாக, இவர்கள் இருவரும் 2007ம் ஆண்டும் கான்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின்போது கடுமையாக மோதிக்கொண்டனர். தொடர்ந்து இருவரும் களத்தில் மட்டுமே மோதிக்கொண்ட நிலையில், அரசியல் நிலைப் பாட்டிலும் மோதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.