கேப்டன்சி
ரோகித் சர்மாவுக்கு 35 வயதாகிவிட்டதால், இனி அவர் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு, 50 ஓவர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிகிறது. ரோகித்திற்கு மாற்றாக ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் இருப்பார்கள் எனக்கூறப்பட்டு வந்த சூழலில் அவர்களையெல்லாம் முந்தி ஹர்திக் பாண்ட்யா அந்த இடத்திற்கு சென்றுள்ளார். அவரை பரிசோதிப்பதற்கான முயற்சி தான் நியூசிலாந்து தொடராகும்.
கம்பீரின் எச்சரிக்கை
இந்நிலையில் இதுகுறித்து கம்பீர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில், ரோகித் சர்மாவின் கேப்டன்சியை ஒரே ஒரு தொடர் மூலம் கணக்கிட கூடாது. ஹர்திக் சிறப்பான கேப்டன் தான், ஆனால் ஹர்திக்கிற்கு போட்டி என்றால் பிரித்வி ஷாவை நான் கேப்டன்சிக்கு பரிந்துரைப்பேன். பிரித்வி ஷா ஒரு ஆக்ரோஷமான கேப்டனாவார். அவரின் தலைமையில் சிறப்பாக செயல்படலாம் எனக் கூறியுள்ளார்.
பிரித்வி மீதான சர்ச்சை
பிரித்வி ஷா இந்தியாவின் எதிர்காலம் எனக்கூறப்பட்ட சூழலில் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கினார். இதனால் 2019ம் ஆண்டு இடைகால தடைவிதிக்கப்பட்டிருந்தார். அன்றில் இருந்து தற்போது அவருக்கு சரிவர வாய்ப்பு கிடைப்பதே இல்லை. இதுகுறித்து கம்பீர் முக்கிய கருத்தை கூறியிருக்கிறார்.
தேர்வுக்குழுவின் பணி
பிரித்வி ஷா இந்தியாவின் எதிர்காலம் எனக் கூறப்பட்ட சூழலில் ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கினார். இதனால் 2019ம் ஆண்டு இடைகால தடைவிதிக்கப்பட்டிருந்தார். அன்றில் இருந்து தற்போது அவருக்கு சரிவர வாய்ப்பு கிடைப்பதே இல்லை. இதுகுறித்து கம்பீர் முக்கிய கருத்தை கூறியிருக்கிறார்.