தோனிக்கு சப்போர்ட்
ஆனால்.. இந்த விவகாரத்தில் ரசிகர்களும், பல்வேறு பிரபலங்களும் தோனியின் பக்கம் நின்றனர். அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். விளையாட்டு துறை அமைச்சர் கிரன் ரிஜ்ஜூவும் தோனிக்கு ஆதரவாக நின்றார். பிசிசிஐயும் தோனிக்குதான் ஆதரவு. அவரது க்ளவுசில் பாலிடன் குறியீட்டை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஐசிசியிடம் அனுமதி கோரியது.
அனுமதி இல்லை
ஆனால் ஐசிசி அனுமதி தரவில்லை. தென் ஆப்ரிக்க அணிக்கு எதிராக தோனியின் க்ளவுசில் இருந்த குறியீடு, அடுத்த வரக்கூடிய போட்டிகளில் இருக்கக்கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து முன்னாள் வீரரும் எம்பியுமான கவுதம் கம்பீர் ஐசிசியை வெளுத்து வாங்கியிருக்கிறார்.
ஐசிசியின் வேலை
அவர் கூறியதாவது: போட்டிகளை சிறப்பான முறையில் நடத்த வேண்டியது தான் ஐசிசியின் வேலையே தவிர, யார் என்ன லோகோ பயன்படுத்துகிறார்கள் என்று பார்ப்பதல்ல. முழுக்க முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமான ஆடு களங்களாக இல்லாமல்,பவுலர்களுக்கும் சாதகமான ஆடுகளங்களை அமைப்பது தான் ஐசிசியின் வேலை.
பெரிதுபடுத்த வேண்டாம்
எனவே, அந்த வேலையை சரியாக பார்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு, இது போன்ற முக்கியத்துவம் இல்லாத விஷயத்தை பெரிதாக்கக் கூடாது என்று கம்பீர் தெரிவித்துள்ளார். தோனிக்கு தற்போது ஆதரவு பெருகியுள்ளதால், அடுத்தகட்டமாக ஐசிசி என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று தெரிய வில்லை.