வெளுத்த மழை
இந் நிலையில், மான்செஸ்டர் நகரிலுள்ள ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. போட்டி தினத்தன்று, காலை நேரத்தில் மைதானத்தில் மழை பெய்தது. அதற்கு முந்தைய நாட்களிலும் மழை கொட்டி தீர்த்திருக்கிறது.
மூடப்பட்ட மைதானம்
மழைக்காக மைதானத்தை மூடிய விவகாரம் குறித்து இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: மைதானத்தை முழுமையாக மூடாதது சுத்த மோசம். அதை ஏற்றுக்கொள்ளவே முடியாதது.
தேவையான உபகரணங்கள்
உலக கோப்பை என்பது மிக முக்கிய தொடர். இங்கிலாந்து வானிலை நிலவரம் முன்பே தெரியும். ஆகையால், மைதானத்தை பாதுகாக்க தேவையான அத்தியா வசிய உபகரணங்களை வைத்திருக்க வேண்டும். கொல்கத்தாவில் கூட மைதானம் முழுவதும் மூடப்பட்டிருந்தது. அதனை, ஏன் இங்கிலாந்து பின்பற்ற வில்லை என்றார்.
கங்குலி கருத்து
தாதா கங்குலியும் இதே கேள்வியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் எழுப்பி இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: உலக கோப்பை பொறுப்பாளர்கள், மைதானத்தை முழுவதுமாக மூட வேண்டும் என்றார்.