For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எழுந்து பார்த்தா எல்லாம் மாறிடுச்சு.. சத்தமே இன்றி சம்பவம் செய்த கோலி.. இங்கிலாந்துக்கு செம செக்!

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் நடக்க இருந்த அஹமதாபாத் பிட்ச் மொத்தமாக மாற்றப்பட்டு உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடக்கிறது. அகமதாபாத் மைதானத்தில் இந்த போட்டி நடக்க உள்ளது.

இந்த போட்டி இரவு பகல் ஆட்டமாக நடக்க இருப்பதால் இதில் பிங்க் பால் பயன்படுத்தப்பட உள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும்.

எப்படி

எப்படி

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் நடக்க இருந்த அகமதாபாத் பிட்ச் மொத்தமாக மாற்றப்பட்டு உள்ளது. முதலில் இந்த அஹமதாபாத் பிட்ச் புற்கள் நிறைந்து காணப்பட்டது. இதனால் இந்த பிட்ச் பாஸ்ட் பவுலிங்கிற்கு ஏற்றபடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

புற்கள்

புற்கள்

புற்கள் அதிகம் இருந்தால் ரிவர்ஸ் ஸ்விங், பவுன்ஸ் ஆகும், இது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கும். ஆனால் கடந்த இரண்டு நாட்களில் பிட்ச் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு இன்று அதிகாலை பிட்ச் மொத்தமாக மாற்றப்பட்டு இருக்கிறது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

புற்கள் இல்லாமல் களிமண் தரையாக பிட்ச் மாற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிட்ச் பெரிய அளவில் டர்னிங் பிட்சாக மாறியுள்ளது. இது முழுக்க முழுக்க இங்கிலாந்து அணிக்கு எதிராக மாறும். பிட்சில் இப்போதே விரிசல்கள் உள்ளது.

பிட்ச்

பிட்ச்

இதனால் இங்கிலாந்து அணி கடுமையாக திணறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இந்த பிட்ச் பாஸ்ட் பவுலிங்கிற்கு ஏற்றபடி இருக்கும் என்று இங்கிலாந்து நினைத்தது. ஆனால் தற்போது இங்கிலாந்து அணிக்கு இது பெரிய ஏமாற்றம் கொடுத்துள்ளது.

Story first published: Wednesday, February 24, 2021, 22:22 [IST]
Other articles published on Feb 24, 2021
English summary
Grass removed from the pitch in Ahmedabad to support Team India in the 3rd test against England
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X