நலன் கருதி நடவடிக்கை
ஆனால் அணியின் எதிர்கால நலனை கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கிரிக்கெட் வாரியம் கூறியது. அதனை ஏற்றுக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் வீரர்களுக்கு அறிவுறுத்தி இருந்தது.
கேப்டன் நீக்கம்
இதையடுத்து குல்பாதின் நயிப் தலைமையிலான அணி உலக கோப்பையில் சோபிக்க வில்லை. அதன் எதிரொலியாக, கேப்டன் பதவியிலிருந்து குல்பதின் நயீப் அதிரடியாக நீக்கப்பட்டு, டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 அணிகளுக்குமே ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
பரபரப்பு புகார்
இந்நிலையில், உலக கோப்பை தோல்வி குறித்து குல்பதின் நயீப், பரபரப்பு கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சீனியர் வீரர்கள் வேண்டுமென்றே உலக கோப்பையில் சரியாக ஆடவில்லை. ஒரு கேப்டன் என்ற முறையில் எனது பேச்சை யாருமே கேட்கவில்லை.
ஜாலியாக சிரித்தனர்
ஒவ்வொரு போட்டியிலும் தோற்றதற்கு பின்னர் சோகமாக இருப்பதற்கு பதிலாக அனைவருமே செம ஜாலியாக சிரித்துக் கொண்டிருந்தனர். யாரையாவது பவுலிங் அழைத்தால் கூட, என்னை கண்டுகொள்ளவில்லை என்று பரபரப்பு புகார்களை முன் வைத்திருக்கிறார்.