2வது போட்டியில் குல்தீப்
இந்தியா -ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரின் ஒரு போட்டியிலும் குல்தீப் யாதவ் விளையாட வாய்ப்பு பெறவில்லை. கடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் விளையாட அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் இன்று நடந்து முடிந்துள்ள இரண்டாவது போட்டியில் அவர் பங்கேற்று விளையாடினார்.
வீழ்த்திய குல்தீப்
இந்தியா -இங்கிலாந்து இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் பென் ஸ்டோக்ஸ் மற்றும் மொயீன் அலி ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் குல்தீப் யாதவ். இந்நிலையில் நம்முடைய அணி சிறப்பாக விளையாடும்போது அதனுடன் நாமும் இருக்க வேண்டும் என்று குல்தீப் யாதவ் குறப்பிட்டுள்ளார்.
கட்டுப்படுத்த வேண்டும்
அணிக்காக பௌலிங் போடும்போது கட்டுப்பாட்டுடன் எதிரணி ஸ்கோரை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதே தனது வேலையாக கருதுவதாக அவர் கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாததால் நெருக்கடியை சந்தித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்வினுடன் ஆலோசனை
இந்நிலையில் எவ்வாறு எந்த இடத்தில் பௌலிங் செய்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுப்பது என்பது குறித்து ஸ்பின்னர் அஸ்வினுடன் ஆலோசித்து பந்து வீசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த முதல் போட்டியில் தோல்வியுற்ற போதிலும் இரண்டாவது போட்டியில் அனைத்து வீரர்களும் கவனத்துடன் விளையாடியதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.