புலம்பெயரும் தொழிலாளர்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக வேறு மாநிலங்களில் வேலை பார்த்துவந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். இதையடுத்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சமமாக இந்த பிரச்சினை நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
உணவு வழங்கும் சேவாக்
இந்த தொழிலாளர்களுக்கு நாடுமுழுவதும் பல்வேறு பகுதிகளில் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கையில் சிலரும், அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல சிலரும் உதவி புரிந்து வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தன்னுடைய வீட்டிலேயே உணவு தயாரித்து வழங்கி வருகிறார்.
சேவாக் திருப்தி
இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் உணவை அவர் தன்னுடைய கைகளால் பேக் செய்வது போல உள்ளது. இந்நிலையில் நம்முடைய வீட்டில் உணவை தயாரித்து, தேவை உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்குவது பெரும் திருப்தியை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
'வெல்டன் லாலா' என பாராட்டு
இந்நிலையில் சேவாக்கின் இந்த உதவிக்கு ஆப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங், பாராட்டு தெரிவித்துள்ளார். 'வெல்டன் லாலா' என்று அவர் கமெண்ட் செய்துள்ளார். இதனிடையே இளம் ஆல்-ரவுண்டர் மயங்க் தகாரும் வீரேந்திர சேவாக்கிற்கு பாராட்டு தெரிவித்து தன்னுடைய வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.