உற்சாகப்படுத்தும் ஹர்பஜன்
கடந்த சீசனில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், போட்டி முடிந்த பின்பும் சக வீரர்களை உற்சாகப்படுத்தினார். ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையிலும் ஹர்பஜன் தமிழிலும், ஆங்கிலத்திலும் ட்வீட் செய்து வந்தார்.
தமிழில் டுவிட் செய்தி
குறிப்பாக, பண்டிகை நாட்கள், மக்கள் பிரச்சனைகள், கஜா புயல் பாதிப்பு அனைத்தும் விவகாரங்களிலும் ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட் செய்து தமது வாழ்த்துகளையும், வருத்தங்களையும் கூறி வந்தார். ஐபிஎல் போட்டிகள் நெருங்கி வருகின்றன.
|
தங்க தமிழ்தேசம்
இந்நிலையில், ஹர்பஜன் தமிழில் ட்விட்செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:பேரன்பிற்கும்,பெருமதிப்பிற்குரிய என் அருமை சென்னை ஐபிஎல் ரசிகர்களே மீண்டும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க, தங்க தமிழ் தேசத்திற்கு வந்து விட்டேன்.
ரசிகர்களே… விசில்போடு
ஒரு ராணுவ வீரன் வருடத்திற்கு ஒரு முறை தன் சொந்தங்களை பார்க்க ஆனந்த கண்ணீருடன் வருவான். அதே உணர்வு தான் என்னுள் இப்போது விசில்போடு, சிஎஸ்கே பேன்அபிஷியல் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த தமிழ் டுவிட் ஹிட் அடித்துள்ளது.