சிஎஸ்கே நாளை யூஏஇ பயணம்
வரும் மாதம் 19ம் தேதி யூஏஇயில் ஐபிஎல் போட்டிகள் துவங்கவுள்ளதையடுத்து 8 ஐபிஎல் அணிகளும் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நாளை தங்களது பயணத்தை துவக்கவுள்ளனர். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை துவங்கப்பட்ட அந்த அணியின் பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவு
இந்த பயிற்சி முகாமில் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் பௌலர் ஷர்துல் தாக்கூருடன் இணைந்து ஆப் -ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்கும் பங்கேற்கவில்லை. மாறாக ரவீந்திர ஜடேஜா நேற்றும் ஷர்துல் தாக்கூர் இன்றும் பயிற்சியில் இணையவுள்ளனர். தோனி தலைமையிலான இந்த பயிற்சி முகாம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.
தாயின் உடல்நிலை பாதிப்பு
மேலும் நாளை சிஎஸ்கே அணி வீரர்கள் சார்ட்டர்ட் விமானம் மூலம் யூஏஇக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இந்த பயணத்திலும் ஹர்பஜன் சிங் கலந்து கொள்ள மாட்டார் என்று தற்போது கூறப்பட்டுள்ளது. அவருடைய தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவர் இரண்டு வாரங்கள் கழித்து தன்னுடைய யூஏஇ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கொரோனா டெஸ்ட் நெகட்டிவ்
இதனிடையே, சென்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றுவரும் பயிற்சி முகாம் நல்ல விதத்தில் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி திருப்தி தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி முகாமிற்காக தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் இரண்டு விதமான பிட்ச்களை அமைத்து கொடுத்துள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட 2வது கட்ட கொரோனா டெஸ்ட்டிலும் அனைவருக்கும் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதால், அவர்களது யூஏஇ பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.