துபாய் : மும்பை இந்தியன்ஸ் அணியின் ஐந்தாவது ஐபிஎல் கோப்பை வெற்றி நேற்றைய ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப்போடியில் சாத்தியமாகியுள்ளது.
இதையடுத்து இந்த வெற்றியை தனது மகன் அகஸ்தியாவிற்கு சமர்ப்பித்துள்ளார் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா.
மேலும் தன்னுடைய அணியை தான் மிகவும் விரும்புவதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பாண்டியா குறிப்பிட்டுள்ளார்.
5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐபிஎல் 2020 இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வெற்றி கொண்டு தன்னுடைய ஐந்தாவது கோப்பையை வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றிக்கு அணியின் அனைத்து வீரர்களுக்கு முக்கிய பங்கு வகித்த நிலையில் ஹர்திக் பாண்டியாவும் தொடரின் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார்.
கோப்பையை கைப்பற்றியவுடன் அதை இறுக கட்டியணைத்து போஸ் கொடுத்த ஹர்திக் பாண்டியா, இந்த புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வெற்றியை தனது மகன் அகஸ்தியாவிற்கு சமர்ப்பிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். தன்னுடைய அணியை தான் மிகவும் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.