3வது டி20
இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 12 டி20 தொடர்களை வெற்றிகண்டுள்ளது. தோல்வியே காணவில்லை என்ற பெருமையை காக்க வேண்டிய முணைப்புடன் ஹர்திக் பாண்ட்யா உள்ளார். மறுபுறம் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவிடம் சரணடைந்த நியூசிலாந்து அணி இந்த வாய்பை பயன்படுத்தி பதிலடி கொடுக்க வேண்டும் என ஆர்வத்துடன் களமிறங்குகிறது.
ப்ளேயிங் 11ல் பிரச்சினை
இந்நிலையில் முக்கியமான இந்த போட்டிக்காக இந்தியாவின் ப்ளேயிங் 11ல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல் விஷயம் ஓப்பனிங்கில் மாற்றம் தேவை என்பது தான். ஒருநாள் போட்டிகளில் கலக்கிய சுப்மன் கில்லால் டி20ல் சோபிக்க முடியவில்லை. 15.2 சராசரியுடன் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவில்லை. மறுபுறம் பிரித்வி ஷா நல்ல ஃபார்முடன் வாய்ப்புக்காக காத்துள்ளார். கில்லுக்கு ஆதரவுக்கொடுப்பார்களா? அல்லது மாற்றுவார்களா என்ற குழப்பம் உண்டாகியுள்ளது.
2வது குழப்பம்
ப்ளேயிங் 11ல் உள்ள 2வது பிரச்சினை உம்ரான் மாலிக்கா அல்லது யுவேந்திர சாஹலா என்பது தான். 2வது டி20ல் மிகவும் ஸ்லோவான பிட்ச் என்பதால் அதிவேக புயல் உம்ரான் மாலிக் வெளியேற்றப்பட்டு, சாஹல் கொண்டு வரப்பட்டார். ஆனால் இன்றைய போட்டியில் பிட்ச் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் சம அளவில் சாதகமாக இருக்கும் எனத்தெரிகிறது. இதனால் மீண்டும் சாஹல் வெளியேற்றப்படலாம்.
வழக்கமான ஃபார்முலா
இந்தியாவை பொறுத்தவரை கடந்த போட்டியிலேயே 3 வேகப்பந்துவீச்சாளர்கள், 4 ஸ்பின்னர்கள் இருந்தனர். இதில் குறிப்பாக சாஹல் சிறப்பாக செயல்பட்டிருந்தார். எனவே வெற்றி கூட்டணியுடனே செல்லலாம் என முடிவெடுக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் இன்றைய ப்ளேயிங் 11ல் என்ன ஆகப்போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.