பறந்த சிக்சர்
அப்போது தான் களத்தில் என்ட்ரி கொடுத்தார் 22 வயதான ஹாரி டெக்டார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அவர் இந்திய பந்துவீச்சுக்கு கவுண்டர் அட்டாக் ஆடினார். குறிப்பாக, உம்ரான் மாலிக் வீசிய ஓவரில் மிட் விக்கெட் பகுதியில் சிக்சர், புவனேஸ்வர் குமார் வீசிய ஓவரில் கவர் பகுதியில் சிக்சர் என்று கெத்து காட்டினார்.
29 பந்துகளில் அரைசதம்
29 பந்துகளில் அரைசதம் அடித்த டெக்டார், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 33 பந்துகளில் 64 ரன்கள் விளாசினார். இதில் 6 பவுண்டரிகளும், 3 சிக்சரும் அடங்கும். இதனால் அயர்லாந்து அணி ஓவரில் 108 ரன்கள் விளாசியது. இந்த நிலையில், போட்டி முடிந்ததும் டெக்டாரை அழைத்து தனது பேட்டை ஹர்திக் பாண்டியா பரிசாக வழங்கி கௌரவித்தார்.
ஐபிஎல் ஓப்பந்தம்
இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஹர்திக் பாண்டியா, பேட்டிங் ஆடும் போது அவர் சில சூப்பர் ஷாட்களை ஆடி ரன் குவித்தார். அவருக்கு வயது 22 தான் ஆகிறது. அதனால் அவருக்கு ஏன் பேட்டை வழங்கினேன். அவர் இன்னும் அதிக சிக்சர் அடித்து ஐபிஎல் ஓப்பந்தத்தை பெற வேண்டும் என்று விரும்புகிறேன்.
ஹர்திக் அறிவுரை
அவருக்கு என் வாழ்த்துக்கள்.. ஹாரிஸ் டெக்டாரை சரியாக பார்த்து கொள்ளுங்கள். அவரை சரியாக வழிநடத்துங்கள். இது கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல. வாழ்க்கை பாடத்துக்கும் தான் சொல்கிறேன். இது அவருக்கு சரியாக நடந்தால் அனைத்து கிரிக்கெட் லீக்களிலும் ஒரு ரவுண்ட் கலக்குவார்.