இந்திய அணி
இதற்கான இந்திய அணி தேர்வு தான் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. காயத்தால் பாதிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, இந்த தொடரில் கம்பேக் கொடுக்கிறார். இதே போல ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும் குணமடைந்துவிட்டதாக தெரிகிறது. இதனால் தென்னாப்பிரிக்கா தொடரில் சரியாக செயல்படாத வீரர்களை நீக்கிவிட்டு, மீண்டும் பழைய வீரர்கள் சேர்க்கப்படவிருக்கின்றனர்.
மீண்டும் பாண்ட்யா
இந்நிலையில் இந்த பட்டியலில் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் பெயரும் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காயம் காரணமாக சரியாக பவுலிங் வீசாமல் இருந்த பாண்ட்யா, பேட்டிங்கிலும் பெரிதாக சோபிக்கவில்லை. எனவே அவரை அணியில் இருந்து வெளியேற்றியது பிசிசிஐ. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தீவிர பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில் அவர் முழு உடற்தகுதி பெற்றுவிட்டதாக தெரிகிறது.
என்ன காரணம்
ஐபிஎல் தொடரில் அகமதாபாத் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள பாண்ட்யா, தான் இனி முழு ஆல்ரவுண்டராக செயல்பட தயாராகிவிட்டேன், ஐபிஎல் 2022ல் எனது பவுலிங்கை பார்ப்பீர்கள் எனக் கூறினார். மேலும் தனக்கு இனி எந்தவித பிரச்சினையும் கிடையாது எனவும் நம்பிக்கையுடன் கூறியிருந்தார். அவரின் செயல்பாடுகளை பார்த்தே அகமதாபாத் அணி ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக பாண்ட்யாவை கேப்டனாக நியமித்தது.
பிசிசிஐ திட்டம்
எனவே ஐபிஎல் தொடருக்கு முன்னதாகவே ஹர்திக் பாண்ட்யாவை பரிசோதித்து பார்த்துவிட பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. ஏனென்றால் தென்னாப்பிரிக்க தொடரிலேயே நல்ல வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் இல்லாமல் இந்திய அணி திணறியது. எனவே பாண்ட்யாவை வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டிகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. ஒருவேளை அவர் சொதப்பினால் வெங்கடேஷ் ஐயருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம்.
Recommended Video
இன்று இறுதி முடிவு
இந்திய அணியின் தேர்வுகள் குறித்த இறுதி முடிவு இன்று மாலை எடுக்கப்படவுள்ளது. கேப்டன் ரோகித் சர்மாவும் இதில் கலந்துக்கொண்டு தனக்கு தேவையான வீரர்களை கேட்டுப்பெறுவார் எனத் தெரிகிறது,. இதில் அவர் முழுமையாக நம்பிக்கை வைத்திருக்கும் ஹர்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு பெற்று கொடுக்கலாம்.