ஆஸ்திரேலிய தொடர்
ஐபிஎல் 2020 தொடர் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நாட்டை விட்டு வெளியேறி யூஏஇயில் விளையாடிய இந்திய கிரிக்கெட் வீரர்கள், தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடருக்காக ஆஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்டு தற்போது ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை முடித்துள்ளனர்.
டி20 தொடர் இந்தியா வெற்றி
ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியாவும் டி20 தொடரை இந்தியாவும் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் வரும் 17ம் தேதி முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியுடன் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் துவங்கவுள்ளது. இந்த தொடர் ஜனவரி மாதத்தின் மத்தியில் முடிவடையவுள்ளது. இதையடுத்தே வீரர்கள் இந்தியா திரும்பவுள்ளனர்.
மன உளைச்சலை தந்தது
இந்நிலையில் தன்னுடைய குடும்பத்தினரை பிரிந்து குறிப்பாக தன்னுடைய மகனை பிரிந்து 4 மாதங்கள் இருந்தது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அவர்களுடன் நேரத்தை செலவழிக்க விரும்புவதாகவும் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். மேலும் டி20 தொடரின் தொடர் நாயகன் விருதை அவர் தனது மகன் மற்றும் குடும்பத்தினருக்கு டெடிகேட் செய்துள்ளார்.
குடும்பத்தினர் வெற்றிக்கு காரணம்
தன்னுடைய வெற்றிக்கு தன்னுடைய குடும்பத்தினரும் அவர்கள் கொடுத்த ஒத்துழைப்பும்தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். தான் டெஸ்ட் போட்டிகளின்போது ஆஸ்திரேலியாவில் இருக்க மாட்டேன் என்றும் அவர் மேலும் கூறினார். உடனடியாக தன்னுடைய குடும்பத்தினரை பார்க்கும் ஆவலையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.