2 மாதம்
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில், 2 மாதத்திற்கு ராணுவத்தில் பயிற்சி மேற்கொள்ள இருப்பதாக அவரே கூறினார். ஆகவே, அந்த தொடரில் அவரை அணி நிர்வாகம் எடுக்கவில்லை.
கீப்பர் பன்ட்
அந்த தொடரில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் முதன்மை கீப்பராக ரிஷப் பன்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு வருடமாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா மீண்டும் டெஸ்ட் அணியில் இணைந்துள்ளார்.
முக்கிய கேள்வி
இருப்பினும் ரிஷப் பன்ட் டெஸ்ட் போட்டியிலும் முதன்மை கீப்பராக இருப்பார் என்று தேர்வுக்குழு தெரிவித்துள்ளது. இந்த தருணத்தில் பிரபல கிரிக்கெட வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே தோனியை மறைமுகமாக விமர்சித்து ஒரு முக்கிய கேள்வியை எழுப்பி இருக்கிறார்.
|
ஏன் இருக்கிறார்?
டுவிட்டர் பதிவின் மூலம் அவர் இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார். அவர் கேட்டிருப்பதாவது: முதன்மை கீப்பராக ரிஷப் பன்ட் இருக்கும் பொழுது விருத்திமான் சஹா ஏன் அணியில் இடம்பெற்றுள்ளார்? அவரை எடுப்பதற்கான காரணம் என்ன?
தோனியை சீண்டுகிறாரா?
பாதுகாப்பிற்காக 2வது கீப்பராக சஹா எடுக்கப்பட்டிருந்தால், அதே பாதுகாப்பிற்காக இன்னொரு கீப்பரை ஏன் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவரின் இந்த பதிவு ஏதோ அணியின் மீதான அக்கறை என்று எடுத்துக் கொண்டாலும், தோனியை குறி வைத்தே தான் அவர் இந்த கேள்வியை கேட்டிருக்கிறார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.