பேட்டிங்கிற்கு சாதகம்
கொஞ்சம் தவறி இருந்தாலும், அயர்லாந்து அணி, இந்தியாவுக்கு விபூதி அடித்திருக்கும். இந்த நிலையில் வெற்றி குறித்து பேசிய ஹர்சல் பட்டேல், 225 ரன்கள் எங்களுக்கு போதுமானதாக இருக்கும் என்று நினைத்தோம். பெரும்பாலான நேரங்களில் இந்த இலக்கை வெற்றிக்கரமாக தடுப்போம். ஆனால் அயர்லாந்து அணி பேட்டிங் அதிரடியாக இருந்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது.
தவறுகளை செய்தோம்
ஆடுகளத்தின் பவுண்டரி லைன்களில் பந்து மின்னல் வேகத்தில் கடக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. நாங்கள் சில தவறுகளை போட்டியில் செய்தோம். அதனால் தான் அயர்லாந்து அணி இவ்வளவு அருகாமைக்கு வந்தனர். ஆனால் நாங்கள் பதற்றம் அடையாமல், கடைசியில் வெற்றி பெற்றோம். இன்றைய ஆட்டம் பேட்ஸ்மேன்களுக்கு தான் சாதகமாக இருந்தது.
ஆச்சரியமாக இருந்தது
அயர்லாந்து அணி வீரர்கள் இப்படி பேட்டிங் திறனை வெளிப்படுத்துவார்கள் என நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. கண்டிப்பாக எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அயர்லாந்து பேட்டிங்கின் தரத்தை இனி யாரும் கேள்வியே கேட்க முடியாது. உலகத்திற்கு அவர்களது திறமையை காண்பித்துவிட்டார்கள். தோல்வி குறித்து பேசிய அயர்லாந்து கேப்டன் பால்பெர்னி, இவ்வளவு அருகில் வந்து தோற்றது மனதை நொறுக்கிவிட்டது என்று கூறியுள்ளார்.
கசப்பு மருந்து
இந்த தோல்வி ஒரு கசப்பு மருந்து போல் உள்ளது. எங்களால் ஜீரணிக்க முடியவில்லை. தற்போது நாங்கள் ஏமாற்றத்துடன் தான் இருக்கிறோம். இருப்பினும் அடுத்தது நியூசிலாந்துடன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறோம். உலகக் கோப்பை தொடரில் நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.