வண்டி
சேலம் திரும்பிய நடராஜனை சின்னப்பம்பட்டியின் நுழைவாயிலில் இருந்தே மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். இவருக்கு சிறப்பு போலீஸ் பாதுகாப்பும் கொடுக்கப்பட்டு இருந்தது. நடராஜனை வரவேற்பதற்காக இரண்டு குதிரைகள் அடங்கிய சாரட் வண்டி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
மக்கள்
சாரட் வண்டியின் இரண்டு பக்கமும் மக்கள் சூழ நடராஜன் வாகனம் மெதுவாக மிதந்தபடி நகர்ந்தது. இவரை வரவேற்க வழி நெடுக கட் அவுட் வைக்கப்பட்டு இருந்தது. அவரின் உறவினர்கள் மட்டுமின்றி சேலத்தை சேர்ந்த பல கிராம மக்களும் இந்த வரவேற்பு விழாவை நடத்தினார்கள்.
கிரிக்கெட் குழுக்கள்
சேலத்தை சேர்ந்த பல கிரிக்கெட் அமைப்புகள், இளைஞர்கள் குழுக்கள் இதை முன்னின்று நடத்தியது. பல வீடுகளில் நடராஜனுக்கு ஆரத்தியும் எடுக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இவருக்காக தேசிய கொடி கொண்டு வரப்பட்டு தோளில் போர்த்தப்பட்டது. பட்டாசுகள் வெடிக்க இவர் வரவேற்கப்பட்டார்.
சிறப்பு வரவேற்பு
நடராஜன் எங்க ஊர் பையன். அவரை வரவேற்க பெருமையா இருக்கு. எங்களுக்கு பெரிய அடையாளத்தை அவர் கொடுத்து இருக்கிறார். அவர் இந்திய அணியில் தொடர்ந்து ஆட வேண்டும் என்று சேலத்து மக்கள் நடராஜனை கொண்டாடி உள்ளனர்.