ஷார்ஜா : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர் மன்தீப் சிங் நேற்றைய கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் 66 ரன்களை அடித்து அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார்.
இந்த போட்டியில் தான் அடித்த அரைசதத்தை தன்னுடைய தந்தைக்கு அவர் சமர்ப்பித்தார்.
இந்நிலையில், இந்த நெருக்கடி நேரத்தில் வாழ்க்கைமீது நம்பிக்கை வைத்து செயல்படும் மன்தீப்பை அவரது தந்தை மேலிருந்து ஆசிர்வதிப்பார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர் மன்தீப் சிங்கின் தந்தை கடந்த சனிக்கிழமை உயிரிழந்த நிலையில், அவர் தொடர்ந்து ஐபிஎல்லில் விளையாடி வருகிறார். கடந்த கேகேஆர் அணிக்கு எதிரான அவரது 66 ரன் குவிப்பு அந்த அணியின் 5வது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
இந்நிலையில், மன்தீப்பின் இந்த செயல்பாட்டிற்கும் அவரது ரன் குவிப்பிற்கும் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த நெருக்கடி நேரத்தில் வாழ்க்கை மீது நம்பிக்கை வைத்து சிறப்பாக விளையாடியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ள விராட் கோலி, மன்தீப்பின் தந்தை அவரை மேலிருந்து வாழ்த்துவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.