தோனி ஏன் இல்லை
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஏன் எந்த லெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கவில்லை என்று ரசிகர்கள் சந்தேகத்து வருகின்றனர். இதை போன்று தோனி ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் அல்லது மென்டராக பணிபுரிய வாய்ப்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
பிசிசிஐ விதி
ஆனால் அதிலும் தோனி தன்னை தொடர்பு படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் இதற்கு காரணம் பிசிசிஐயின் ஒரு விதி தான் என்று கூறப்படுகிறது. அதாவது சர்வதேச கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு பெற்றால் மட்டும் போதாது, பிசிசிஐ தொடர்புடைய அனைத்து கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றால் மட்டுமே லெஜண்ட்ஸ் தொடர்களில் பங்கேற்கலாம்.
ரெய்னா முடிவுக்கு காரணம்
இதன் காரணமாகத்தான் சுரேஷ் ரெய்னா, உத்தப்பா போன்ற வீரர்கள், திடீரென இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இதன் மூலம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள தி ஹண்டரட், ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பிக் பேஷ் தொடர் , துபாயில் நடைபெறும் எமிரேட்ஸ் டி20 தொடர் ஆகியவற்றில் விளையாடுவதற்காக தகுதி பெற்றுள்ளனர்.
தோனி ஓய்வு எப்போது?
ஆனால் தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வேண்டும் என்பதற்காக இன்னும் ஓய்வு முடிவை அறிவிக்காமல் இருக்கிறார். அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தோனி தனது கடைசி போட்டியை சென்னையில் விளையாட விட்டு அவரும் ஒட்டுமொத்த கிரிக்கெட் போட்டியில் இருந்தும் விலகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.