அடுத்த ஆண்டு பைனல்
அடுத்த ஆண்டு ஜூன் மாதம் லார்ட்ஸ் மைதானத்தில் இறுதிப் போட்டிக்குத் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுதான் இந்த சாம்பியன்ஷிப்பை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில்தான் இந்த புள்ளிகள் விவரத்திற்கு விமர்சனம் வந்துள்ளது ஹோல்டிங் மூலமாக. இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் எல்லாம் வேலைக்கு ஆகாது என்று தெரிவித்துள்ளார்.
ஹோல்டிங் அதிருப்தி
முதலில் இந்த பாயிண்ட் முறையே கேலிக்கூத்தாக உள்ளது. 2 போட்டிகளில் விளையாடி கிடைக்கும் பாயிண்ட்டுகளை நீங்கள் ஐந்து போட்டிகள் விளையாடியும் எடுக்க முடியாது என்றால் எப்படி. அடுத்து, சில அணிகளுக்குப் பாதியிலேயே தெரிந்து விடும் நாம் இறுதிப் போட்டிக்குப் போக முடியாது என்று. எனவே அவர்கள் ஈடுபாட்டுடன் ஆட மாட்டார்கள். எனவே சுவாரஸ்யம் குறைந்து போய் விடும். இதை மக்களும் ஆர்வமாக பார்க்க மாட்டார்கள் என்று ஹோல்டிங் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
வோக்ஸுக்கும் பிடிக்கலை
இதே கருத்தையே இங்கிலாந்து வேகப் பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸும் எதிரொலித்துள்ளார். பாயிண்ட் முறையில் மாற்றம் தேவை. அதை எதிர்காலத்தில் செய்தாக வேண்டும். கண்டிப்பாக இதை செய்தாக வேண்டும். டாஸ், சுற்றுச்சூழலைப் பொறுத்து போட்டிகளின் முடிவுகள் மாறக் கூடும். எனவே ஒரு போட்டி பைனலுக்குப் பதில் 3 போட்டிகள் கொண்ட பைனலாக மாற்றினால் நல்லாயிருக்கும் என்றார் வோக்ஸ்.
பைனல் நடக்குமா
இந்தியா தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது என்பது நினைவிருக்கலாம். ஆனால் தற்போது கொரோனாவைரஸ் பரவல் காரணமாக உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் முடங்கிப் போயுள்ளன. டெஸ்ட் போட்டிகளும் நடைபெறவில்லை. எனவே அடுத்த ஆண்டு இறுதிப் போட்டி நடைபெறுமா என்பதிலும் குழப்பம் நிலவுகிறது.